புதன், 2 டிசம்பர், 2009

தண்ணீரில் மீனழுதால் கண்ணீர் தெரியுமா?

வான விண்மீன்கள் ஒளிரும் கருவிழிகள்; நிலவின் ஒளிக்கிரணம் விஞ்சும் சிறுமுகங்கள்; அச்சில் வார்க்காத பசும்பொன் சிற்பங்கள்; ஆதரிக்க ஆளில்லா அழகிய சித்திரங்கள்! கால சுழற்சியில் மொட்டவிழ்ந்த நித்திலங்கள்; வாழத்துடிக்கையில் வாஞ்சையார் யாருமிலர்! பணமெனும் சிறுமைப் பேய் பாரினை ஆட்டுவதால் பவித்திர மக்கள் பாவியாய் ஆயினரோ!? குத்து விளக்கேற்ற குலமகள் குடியேர- கொத்தாய் பொருள்கூட்டி தட்சணை கேட்கின்றார்! இளமைக் காலத்தின் இன்பக் கிளர்ச்சியுடன் மணக்கோலம் பூண்டு மங்கல நாணேற்க, சோகத் தண்ணீரில் இம் மீனழுதால் - வெள்ளமாயோடும் கண்ணீர் தெரியுமா?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக